ஐ.நா. மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பான பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றம் 0
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. 47 நாடுகளைக் கொண்ட பேரவையில், குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. அத்துடன் இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான்,