ஐ.நா. மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பான பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றம்

🕔 March 23, 2021

க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

47 நாடுகளைக் கொண்ட பேரவையில், குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன.

அத்துடன் இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிபைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுயுலா ஆகிய நாடுகள் குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தன.

வாக்கெடுப்பு நேற்று எடுக்கப்படவிருந்த போதும் சில திட்டமிடல் சிக்கல்களைத் தொடர்ந்து இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் மனித உரிமைகளையும் ஊக்குவித்தல் எனும் தலைப்பிலான மேற்படி பிரேரணை பிரித்தானியா, கனடா, ஜேர்மன், வடக்கு மெஸிடோனியா, மொன்டிநீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய வாக்கெடுப்புடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வு நிறைவுப் பெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்