உம்றா: வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனையுடன் இன்று தொடக்கம் அனுமதி 0
கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்கள் உம்றா கடமையினைச் செய்வதற்கு இன்று முதல் (09ஆம் திகதி) அனுமதி வழங்கப்படும் என சஊதி அரேபியா அறிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து, வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு தனது எல்லையை சஊதி அரேபியா மூடி 18 மாதங்களின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக மாதாந்தம் 60,000 உம்றா யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும்,