இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி 0
– மரைக்கார் – ‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் எந்தவொரு அமைப்பும் தற்போது செயற்பாட்டில் இல்லாத நிலையில், அதன் ‘தலைவர்’ என எஸ்.எம். சபீஸ் என்பவர் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றமை குறித்து கேள்வியெழுபப்படுகின்றது. ‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் முன்னர் அமைப்பொன்று இயங்கி வந்தபோதிலும் தற்போது அது செயலற்றுப் போயுள்ளது.