அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவு நடவடிக்கை நிறைவு 0
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு அமைய அந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகியது. அந்த ஆணைக்குழுவின் ஆட்சிக்காலம் எதிர்வரும் 09 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.