ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி, முஸ்லிம் சமூகத்தை சூழ்நிலைக் கைதியாக்குமா? 0
– சுஐப் எம்.காசிம் –நாட்டின் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் ஒவ்வொரு சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அரசியல் எழுச்சிகள், விழிப்புக்களின் பின்னணிகளில் பல புறச்சூழல்கள் பங்காற்றியுள்ளன. 1977 இல் ஏற்பட்ட தமிழர்களின் எழுச்சியில் கல்வித் தரப்படுத்தல், தனிச் சிங்களச் சட்டம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் பின்புலமாகச் செயற்பட்டன.இந்தப் புறக்காரணிகளை இன உணர்வுக் கோஷங்களாகவும் அரசியல் மூலதனமாகவும் பயன்படுத்தி ஒட்டு