நீருக்குள்ளிருந்த கிராமம், வெளித் தெரிகிறது; கொத்மலையில் அதிசயம்: பார்வையிட மக்கள் படையெடுப்பு
🕔 March 31, 2016
– க. கிஷாந்தன் –
கொத்மலை நீர்த்தேக்கத்தில் அமிழ்ந்திருந்த மொறபே என்கிற பழைய நகரம் மற்றும் பௌத்த விகாரை என்பன 25 வருடங்களுக்குப் பின்னர், தற்போது மீண்டும் வெளித் தெரியத் தொடங்கியுள்ளது.
மலையகத்தில் நிலவி வந்த வரட்சியான காலநிலை காரணமாக, கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாகவே, நீர்த் தேக்கத்தில் அமிழ்ந்து போயிருந்த விகாரை தெரிய ஆரம்பித்துள்ளது.
அதுமட்டுமன்றி, நீரில் மூழ்கிய பழைய நகரம் மற்றும் கிராமமும்மக்களின் கண்களுக்கு தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை பார்வையிட பல பகுதிகளிலும் இருந்து மக்கள் வருகின்றனர். அத்தோடு அவர்கள் வழிபாடுகளில் ஈடுப்பட்டு செல்கின்றமையினையும் காணக்கூடியதாக உள்ளது.
கொத்மலை மொறபே பழைய நகரில் இருந்த கிராமமானது, கொத்மலை நீர்த்தேக்கம் ஆரம்பிக்கும் போது, நீரில் மூழ்கிப் போனமை குறிப்பிடதக்கது.