தலைப்புச் செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல தொகை, நாளை வைப்பிலிடப்படும்

ல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகரித்து வழங்கப்படும் மஹபொல உயர்கல்வி உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய், நாளை செவ்வாய்க்கிழமை (10) முதல் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ், பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல உயர்கல்வி உதவித்தொகை ரூ. 10,000 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் – குறித்த தொகை வைப்பிடப்படும் என்று லலித் அதுலத்முதலி மஹபொல உயர்கல்வி உதவித்தொகை அறக்கட்டளை நிதியத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி விஜித் மலல்கொட தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ், இந்த கொடுப்பனவு ரூ. 7,500 இலிருந்து ரூ. 10,000 ஆக அதிகரிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வந்தது.