
கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் சொஹாரா புஹாரி- அவரின் உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
கட்சி எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கையைத் தொடர்ந்து, அவரின் உறுப்பினர் பதவி பறிபோயுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் அறிவுறுத்தல்களை மீறி, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து, அவரை கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்துவதாக, முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது.
இதனையடுத்து, அவரின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிபோயுள்ளது.
இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.



