தலைப்புச் செய்திகள்

ஓட்டமாவடி பிரதேச சபையை, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட  எம்.எஸ். ஹலால்தீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது, ஐக்கிய தேசிய கட்சி, சுயேட்சை உறுப்பினர், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்கள் தவிசாளர் தெரிவுக்கு ஆதரவுகளை வழங்கினர். இந்த வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஏலவே,  தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட, அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த பைரூஸ் -கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்புரிமை பறிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏற்பட்ட தவிசாளர் பதவிக்கான தெரிவு இன்று (20) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.