தலைப்புச் செய்திகள்

பொதுமன்னிப்பு வழங்கியமைக்காக மைத்திரிக்கு விதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை: செலுத்தி முடித்தார் என நீதிமன்றில் தெரிவிப்பு

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹா என்பவருக்கு – ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்காக, உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட 01 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்தி முடித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று (29) உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ். துரைராஜா, யசந்த கோடகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜரானார்.

முன்னாள் ஜனாதிபதி சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, முன்னர் உத்தரவிட்டபடி இழப்பீட்டுத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இந்த உறுதிப்படுத்தலைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை விடுவிக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.