பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

🕔 July 19, 2024

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக பேராசிரியர் டப்ளியூ.எம்.டீ. மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழகச் சட்டத்தின் 34 (1) (அ) பிரிவிற்கு அமைய, 2024 ஓகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தராகப் பதவி வகித்து வந்த நிலையில், புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக தற்போது பேராசிரியர் எம்.டி. லமவன்ச பதவி வகிக்கின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்