பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 75 நாட்களின் பின்னர் முடிவுக்கு வந்தது

🕔 July 15, 2024
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் போராட்டம் (படம்: எம்.வை. அமீர்)

ல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தத்தை இன்று (15) தொடக்கம் கைவிடத் தீர்மானித்துள்ளனர்.

கடந்த 75 நாட்களாக பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற் சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் கல்வி அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத்தொடர்ந்து – இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சம்பள அதிகரிப்பை வழங்கக் கோரியும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இவ்வருடம் மே மாதம் 02ஆம் திகதி தொடக்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்