பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபரொருவர் கைது

🕔 June 14, 2024

பொலிஸார் கைது செய்த இரண்டு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக, நாகொல்லாகம பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் – நபர் ஒருவர் நேற்று (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களை விடுவிக்க, 50,000 ரூபாயை நபரொருவர் வழங்க முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு லஞ்சம் கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஹிரியால – அம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவராவார். கைது செய்யப்பட்ட 20 மற்றும் 28 வயதுடைய இரு சந்தேக நபர்களும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் இன்று (14) மஹாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்