ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்து விட்டார்: ஊடகங்கள் உறுதிப்படுத்தின

🕔 May 20, 2024

ரானிய ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் நேற்று (19) விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த ஜனாதிபதி ரைசி, வெளியுறவு அமைச்சர் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் பலர் இறந்ததாக பல ஈரானிய செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

“ஹெலிகாப்டரின் சிதைவுகளைப் பார்க்கும்போது, இதுபோன்ற விபத்தில் யாராவது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஹெலிகொப்டரின் அறை பகுதிகள் (cabin) முழுவதும் எரிந்திருப்பதைக் காண்கிறோம்” என, ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதாகவும், அந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காண முடியவில்லை என்றும் ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக நாட்டின் மலை மற்றும் வனப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தொடர்பான செய்தி: ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து: யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என தகவல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்