இரண்டு வருடங்களில் 72 புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 May 15, 2024

ரசாங்கம் – கடந்த 02 வருடங்களில் 75 புதிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தை இன்று (15) காலை திறந்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.

இரண்டு வருடங்களில் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிலையில், தெற்காசியாவில் புதிய சட்ட முறைமையை செயற்படுத்தும் ஒரே நாடு இலங்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஊழலை ஒழிக்க பல புரட்சிகரமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாகவும், திருடர்களை அரசாங்கம் பாதுகாப்பதாக – சிலர் குற்றம் சுமத்தினாலும், திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ‘ஊழலை ஒழிப்போம்’ என்பதை அரசியல் கோஷமாக பயன்படுத்துவதைக் கைவிட்டு, புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்