சிஐடியில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவுக்கு அழைப்பு

🕔 April 17, 2024

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவை, விசாரணையொன்றுக்காக நாளை மறுதினம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) அழைத்துள்ளனர்.

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சில விவரங்கள் தனக்குத் தெரியும் என – குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நம்புவதால் தனக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2021 நொவம்பர் மாதத்திலும் அருட்தந்தை சிறில் காாமினி பெனாண்டோ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார். அப்போது அவர் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடை உத்தரவைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்