பண மோசடிக் குற்றச்சாட்டு வழக்கு: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த விடுதலை

🕔 April 30, 2024

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பண மோசடி வழக்கில் இருந்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மஹிந்தானந்த அமைச்சராக இருந்த காலப்பகுதியில் – சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கு, பொரல்ல – கிங்ஸ்லி வீதியில் சொகுசு வீட்டை கொள்வனவு செய்ததாகவும், அதற்கான நிதி ஆதாரத்தை வெளியிடத் தவறியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து – கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த நல்லாட்சிக் காலத்தின் போது, மஹிந்தானந்தவுக்கு எதிராக சட்ட மா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்