ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுங்கள்: அமைச்சரவையில் ரணில்
பொதுத் தேர்தலுக்கு முன்னர் – ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
நேற்று (18) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளை கூடிய விரைவில் முடிக்குமாறும் ஜனாதிபதி அமைச்சரவைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ‘தி மோனிங்’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஆயினும், பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல்