காஸா சிறுவர் நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

🕔 April 29, 2024

காஸா மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்துக்கு பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை 2024 மே 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை, இந்த மாதம் 30ஆம் திகதி என, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது – கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த நிதியத்துக்குப் பங்களிக்க விரும்பும் நன்கொடையாளர்கள், குறித்த திகதிக்கு முன்னர் தமது அன்பளிப்பை – இலங்கை வங்கி தப்ரோபன் கிளையில் (747) 7040016 எனும் வங்கிக் கணக்கில் வைப்பு செய்து, பற்றுச்சீட்டை 077-9730396 என்ற எண்ணுக்கு WhatsApp ஊடாக அனுப்புமாறு – ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்பான செய்தி: காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனையிலிருந்து 50 லட்சம் ரூபா நிதி: ஹரீஸ் எம்.பி வழிகாட்டலில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்