சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை
ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சனத் நிஷாந்தவின் சாரதிக்கு இன்று (05) பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அவரை 05 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர், வெலிசர நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் – பிரதியமைச்சரின் சாரதி ஜனவரி 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஜனவரி 25 அன்று, சனத் நிஷாந்தவின் வாகனம் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், அதிகாலை 02:00 மணியளவில் – பயணித்துக் கொண்டிருந்த ட்ரக் வண்டியில மோதி – சாலையோரத் தடையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ராஜாங்க அமைச்சர் உட்பட காயமடைந்த மூவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் ராஜாங்க அமைச்சரும் அவரின் பாதுகாவலரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.