கெஹலியவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானம்

🕔 February 5, 2024

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சுப் பதவியை பறிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் சுகாதார அமைச்சரான அவர் தற்போது சுற்றாடல்துறை அமைச்சராக இருக்கிறார்.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியில் இருக்கும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால், நடைமுறை ரீதியான பல சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதால் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுதொடர்பாக இன்னும் இறுதி அறிவிப்பு எதுவும் அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியாக்கப்படவில்லை.

ஊழல், அரச சொத்துக்களை முறைக்கேடு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ள அமைச்சர் கெஹெலியவை பதவி நீக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(நன்றி: அய்வரி)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்