விபத்தில் பலியான ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்க மறியல்

🕔 January 26, 2024

விபத்தில் மரணித்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர் குறித்த விபத்து இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனத்தை செலுத்தியிருந்தார்.

அந்த விபத்தில் சிறிய காயங்களுக்குள்ளான சாரதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சாரதி பிரபாத் எரங்க பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். கொழும்பு நோக்கி விரைந்தபோது – வாகனத்தை இடமிருந்து முந்திய வேளை, கண்டெய்னர் ட்ரக் மீது மோதியதாக அவர் கூறியுள்ளார்.

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவருடைய பாதுகாவலர் பொலிஸ் கொன்ஸ்டபிள் அனுராத ஜயக்கொடி ஆகியோர் – நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தனர்.

உயிரிழந்த கொன்ஸ்டபிள் ஜெயக்கொடி – சாஜென்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்