“நம்மவரைக் கொண்டாடுவோம்”: முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோருக்கான கௌரவ நிகழ்வு

🕔 January 27, 2024

ய்வுபெற்ற அரசாங்க அதிபரும் முன்னாள் பிரதேச செயலாளருமான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா அவர்களின் நற்பணியைக் கௌரவிப்பதோடு, அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – தன்னார்வத்துடன் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கிய ‘சேனையூர் இளைஞர் அமைப்பு’ உறுப்பினர்களை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நம்மவரைக் கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வு நாளை (28) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தர் ஏ.சிஎம். சமீர் அவர்களும், அவர் ஆற்றிவரும் சமூக நற்பணிக்காக கௌரவிக்கப்படவுள்ளார்.

‘நாம் ஊடகர் பேரவை’ (We Journalists Forum) மற்றும் ருஹுணு லங்கா’ ஆகியவை இணைந்து இந் நிகழ்வை நடத்துகின்றன.

‘நாம் ஊடகர் பேரவை’ (We Journalists Forum) தலைவர் – ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. சாபிர், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, பொத்துவில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம். பிர்னாஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ், அட்டாளைச்சேனை பிரசே உதவிச் செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபிர், இறக்காமம் பிரதேச உதவிச் செயலாளர் எம்.ஏ.சி. நசீல், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் ஏ.எல். பாயிஸ், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். ஜுனைதீன் மற்றும் மக்கள் வங்கி பொத்துவில் கிளையின் வியாபார மேம்பாட்டு அதிகாரி எம்.ஐ.எம். நபீல் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந் நிகழ்வில் ருஹுணு லங்கா தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருமான எம்.எஸ்எம். ஜவ்பர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான எம்.எப். நவாஸ் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

நிகழ்ச்சியை ‘நாம் ஊடகர் பேரவை’ (We Journalists Forum) செயலாளரும் ஊடகவியலாளருமான றிசாத் ஏ காதர் தொகுத்து வழங்கவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்