நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

🕔 January 12, 2024

ற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதியானது, மூன்று மொழிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

புதன்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட மேற்படி வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் கசிந்ததாக சந்தேகம் எழுந்ததால், குறித்த வினாத்தாளை ரத்துச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர், குறித்த பாடத்துக்கான புதிய பாகம் வழங்கப்படும் என – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையின் – விவசாய விஞ்ஞான பாடத்துக்கான பகுதி இரண்டுக்கான புதிய பரீட்சைத் திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பின்னர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்