ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் நிருவாக சபையை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்
ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து முன்வைத்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த இந்தப் பிரேரணைக்கு – அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆதரவளித்தார்.
இதனையடுத்து பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
“ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தில் இருந்து தலைவர் உள்ளிட்ட ஊழல் அதிகாரிகளை நீக்க வேண்டும்” என்ற தலைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இதனடிப்படையில் ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்திலிருந்து அதன் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழு நீக்கப்பட்டுள்ளது.