கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த ஆசிரியர்கள் இருவர், பாடசாலையில் வைத்து கைது
வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சங்கீத வகுப்பறையில் கஞ்சா சுருட்டு புகைத்துக் கொண்டிருந்த போது பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.
கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்கள் 1.9 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் அபேவிக்ரம தலைமையிலான பொலிஸ் குழு – இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.