சம்மாந்துறை கோயில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

🕔 October 13, 2023

பாறுக் ஷிஹான்

கோயில் கிணறு ஒன்றில்  இருந்து  மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவில்  காணி ஒன்றில் அமைந்துள்ள கிணறு ஒன்றை நேற்று வியாழக்கிழமை (12)  துப்பரவு செய்த போது, அதிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது, எல்எம்ஜி துப்பாக்கி தோட்டாக்கள் 57,  ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு இரண்டு, 261 தோட்டாக்கள், 0.22 துப்பாக்கிக்குரிய வெற்று தோட்டாக்கள் 46 அதற்குரிய தோட்டாக்கள் 3, எம் 16 துப்பாக்கிகுரிய தோட்டாக்கள் 11 மற்றும் ஒரு சுடர் துப்பாக்கி (Flare Gun) என்பன கிணற்றினுள் இருந்து மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார்  மீட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்