விமான நிலையம் வந்த பெண்ணின் தங்க நகைகளைத் திருடிய ஊழியர் சிக்கினார்
வெளிநாடு செல்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பெண்ணிடம் தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பாதுகாப்புப் பரிசோதகர் ஆவார்.
விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவர் மினுவாங்கொட – ஹீனட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில், பெண்ணிடம் இருந்து திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ், பென்டன்ட் மற்றும் 03 மோதிரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை (28) குறித்த நகைகளை சந்தேக நபர் திருடியுள்ளார்.