
நிட்டம்புவ நகரிலுள்ள தனியார் வங்கியொன்றின் ஏரிஎம் (ATM) இயந்திரத்தில் 7.8 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து வங்கி நிர்வாகம் நிட்டம்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில் ஏரிஎம் இயந்திரம் எந்த விதத்திலும் சேதமடையவில்லை எனவும், இயந்திரம் திறந்து – பணம் அகற்றப்பட்டு, பின்னர் மூடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவத்தில் திட்டமிட்ட குழுவா அல்லது வங்கியிலுள்ள நபர்கள் யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



