உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு கோரிக்கை
உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் 9ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, தேசிய மக்கள் சக்தி மற்றும் பஃப்ரல் அமைப்பு என்பன மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள் இன்று (25) விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் உரிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான தெரிவித்தார்.
இந்த நிலையில் மனுக்கள் மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.