கிழக்கு ஆளுநர் செந்திலுக்கும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் சந்திப்பு

🕔 July 22, 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (22) திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம் பெற்றது

இந்சந்திப்பில் கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் ஏனைய அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் , அண்மையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்தில் – காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக, ஆளுநர் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு, அது தொடர்பில் இறுதித்தீர்மானமும் எடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தி தொடர்பாக சகல ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

இக்கலந்துரையடலில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஶ்ரீலங்கா ஹிரா பொளண்டேஸன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி , மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் அமீர், காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி ஹக்கீம், காத்தான்குடி முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி கலாவுத்தீன் , காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலய அதிபர் யூனூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்