தம்பி குத்தியதில் அண்ணன் பலி

🕔 July 7, 2023

ருபத்து ஐந்து வயதுடைய நபரொருவர் நேற்று (06) இரவு பொலன்னறுவை பெலட்டியாவவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து அவரது இளைய சகோதரரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வாக்குவாதத்தை அடுத்து இளைய சகோதரன் தனது மூத்த சகோதரனை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விசாரணையில் இளைய சகோதரர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மன்னம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்