எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது
எரிபொருள் ஒதுக்கீடு இன்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் பதிவு பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்துக்கு 22 லீட்டரும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்துக்கு 14 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் கார் மற்றும் வேன்களுக்கு வாரத்திற்கு 40 லீட்டரும் வழங்கப்படவுள்ளது.
பேருந்து மற்றும் லொறிகளுக்கு வாரத்துக்கு 125 லீட்டர் எரிபொருள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.