அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் எச்சரிக்கை

🕔 May 25, 2023

.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் – 2022 (2023) தொடர்பாக, பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி – பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகளை தடுத்து வைக்க வேண்டாம் என – பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

அனுமதி அட்டைகள் கிடைக்காத காரணத்தினால் எந்தவொரு மாணவரும் பரீட்சைக்குத் தோற்ற முடியாத பட்சத்தில், அதற்கு அதிபரே பொறுப்பேற்க வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்