கோட்டா, மைத்திரி ஆகியோரை, கொலை செய்ய திட்டமிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைதான பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் கடமையில்

🕔 March 30, 2023

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்.

அதன்படி அவர் புத்தளம் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் இருவரையும் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக, நாமல் குமார என்பவரால் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பின்னணியில், 2018 ஆம் ஆண்டு, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து இவர் நீண்ட காலம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்