உள்ளூராட்சி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு: காரணமும் வெளியானது

🕔 February 17, 2023

ள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியான அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம்திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது எனவும், அதற்கான உத்தியோகபூர்வ திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வாக்கெடுப்பை ஒத்திவைக்கப்பதற்கான காரணிகள் தற்போது இல்லையென முன்னதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தபால் மூல வாக்கெடுப்பு, மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

உறுதியளித்தவாறு அரச அச்சகத்தினால் உரிய வாக்குச்சீட்டுகள் வழங்கப்படாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்