மின்வெட்டு இன்று முதல் இல்லை: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு
மின்சாரம் இன்று (16) தொடக்கம் துண்டிக்கப்பட மாட்டாது என, மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின் சக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதணைக் கூறினார்.
இதேவேளை, அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் இன்று தொடக்கம் அமுலாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
66 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: மின்சார கட்டணங்கள் இன்று தொடக்கம் அதிகரிப்பு: நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டிவரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்