தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியும்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

🕔 February 15, 2023

ள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக, நேற்றைய தினம் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இன்று ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்று (15) முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், நிதி கிடைக்காமை காரணமாக தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பதில் தடைகள் ஏற்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்தது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரச அச்சகம் என்பன கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.

அதன்படி, எதிர்வரும் சில நாட்களுக்குள் திட்டமிடப்பட்டபடி தபால் வாக்குச்சீட்டுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்