சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பதவியை ராஜிநாமா செய்த ஆஷு மாரசிங்க, மீண்டும் ஜனாதிபதி ஆலோசகராக நியமனம்
அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
‘டெய்லி மிரர்’ மாரசிங்கவை தொடர்பு கொண்ட போது, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக தான் மீண்டும் நியமிக்கப்பட்டதை – அவர்உறுதிப்படுத்தினார்.
தனது முன்னாள் காதலியின் வளர்ப்பு நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர – சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றினை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பு முன்னர் ஆஷு மாரசிங்க தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதேவேளை, தன்னைக் குறிதது வெளியிடப்பட்ட வீடியோ ‘எடிட்’ செய்யப்பட்டது என, மாரசிங்க பின்னர் முறைப்பாடு செய்தார்.
தொடர்பான செய்தி: நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முன்னாள் எம்பி: ஆசு மாறசிங்க மீது குற்றச்சாட்டு: வீடியோ காட்சியும் அம்பலம்