பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது
பெற்றோல் விலை இன்று (01) நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபா அதிகரிக்கிறது.
இதற்கமைய 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 400 ரூபாவாகும்.
இதேவேளை, ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.