மாணவிக்கு அடித்த ஆசிரியர் கைது

தரம் ஐந்தில் கற்கும் மாணவி ஒருவரை அடித்த ஆண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை – ஹங்கமவிலுள் பாடசாலை வளாகத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாணவியின் வகுப்பு ஆசிரியரான குறித்த ஆசிரியரை, ஹங்கம பொலிஸார் நேற்று (10) கைது செய்தனர்.
மாணவியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த மாணவிக்கு – ஆசிரியர் அடிக்கடி அடித்து வந்துள்ளதாக, தாய் தனது புகாரில் கூறியுள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகி வரும் மாணவி, மருத்துவ பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.