111 கைக்குண்டுகள், உழுத காணியிலிருந்து மீட்பு

🕔 October 14, 2022

ழுது கொண்டிருந்த காணியொன்றிலிருந்து, 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மானிப்பாய் – நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை மீட்டதாக யாழ்ப்பாணம் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

நவாலி – அட்டகிரி பகுதியில் காணியொன்றினை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழுத நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்றை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரிடமிருந்து கிடைக்கபெற்ற தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் கைக்குண்டுகளை அடையாளம் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, நீதிமன்ற அனுமதி பெற்று இன்று (14) காலை 6 மணி முதல் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்