உள்ளுராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு, உட்கட்சி பிரச்சினைதான் காரணமாம்

🕔 December 26, 2015
SLFP-Logo - 01ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பிரச்சினை காரணமாகவே உள்ளுராட்சி சபை தேர்தல்களை அரசாங்கம் 06 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் உட்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு ஏற்படாமையினைஅடுத்தே, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை ஜனாதிபதி பிற்போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றனர்.

இந்த நிலைவரமானது, கட்சியில் பிளவினை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கும் ஜனாதிபதி விருப்பம் கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

இது இவ்வாறிருக்க, உள்ளுராட்சி தேர்தல்கள் எதிர்வரும் தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் நடத்தப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்