ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் ‘லடாய்’: லான்சாவை அச்சுறுத்திய சனத் நிஷாந்த

🕔 February 18, 2022

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த – தொலைபேசி வழியாக மற்றொரு ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை அச்சுறுத்திப் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் திட்டங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, தொலைபேசியில் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை அச்சுறுத்துப் பேசுவதாக அந்த குரல் பதிவு அமைந்துள்ளது.

அபிவிருத்தி நடவடிக்கையொன்றுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ளதால் ஏற்பட்ட விரோதம் காரணமாக, இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, குறித்த குரல் பதிவு மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

திட்டமிடப்பட்ட அடிக்கல் நாட்டும் விழா நடந்தால், ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி, நிமல் லான்சா தாக்கிப் பேசப் போவதாக, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அந்த ஒலிப்பதிவில் மிரட்டுகின்றார்.

குரல் பதிவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்