பயங்கரவாத தடைச் சட்டம்; தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை

🕔 January 27, 2022

யங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ‘தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகள்’ அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்ட மூன்று தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று (26) அனுமதி வழங்கியது.

முர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்