நாட்டில் மீண்டும் மின் தடை வருகிறது: மின்சார சபை அறிவிப்பு

🕔 December 22, 2021

நாட்டின் பல பகுதிகளில் இன்று (22) மின்சாரம் தடைபடலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையத்தில் உள்ள ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

நுரைச்சோலை நிலையத்தின் மின் உற்பத்தி இன்னும் முழு அளவை எட்டாததால், சில பகுதிகளில் மின் தடைகள் ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை மேலும் கூறியுள்ளது.

900 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின் கட்டமைப்புக்குகு சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இம்மாத தொடக்கத்தில் அனல்மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர்கள் பழுதடைந்ததால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், தற்போது பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் இன்று சில பிரதேசங்களில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை மின்சாரம் தடைபடலாம் என சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததையடுத்து, டிசம்பர் 03ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பல மணித்தியாலங்களுக்கு மின் தடை ஏற்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்