அம்பாறை பொது மருத்துவமனையில் இதயநோய் சத்திர சிகிச்சைப் பிரிவை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல்

🕔 December 7, 2021

ம்பாறை பொது மருத்துவமனையின் நீர்மமேற்று ஆய்வுகூடத்துடன் (Catheter Laboratory ) கூடிய இதயநோய் சிகிச்சைப் பிரிவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சர் இது தொடர்பில் சமர்ப்பித்த யோசனைக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இதய நோய்களுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் இதயநோயால் இறக்கின்றவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் படிப்படியாக அதிகரித்துள்ளது.

இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, சிகிச்சை பெறுவதற்கு சமூகமளிக்கும் இதய நோயாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் சத்திரசிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக, அம்பாறை பொது மருத்துவமனையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான தேவை காணப்படுகின்றது.

அதற்கமைய, அம்பாறை பொது மருத்துவமனையின் நீர்மமேற்று ஆய்வுகூடத்துடன் (Catheter Laboratory ) கூடிய இதயநோய் சிகிச்சைப் பிரிவொன்றை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தை தயாரித்து, நிர்மாணித்து, ஒப்படைத்தல் எனும் அடிப்படையில், பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகத்துக்கு வழங்குவதற்காக, சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்