சட்டப் படிப்புக்கான நுழைவுப் பரீட்சை வினாத்தாள், முன்கூட்டியே வெளியானது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

🕔 November 15, 2021
கோப்புப் படம்

திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பட்டப்படிப்புக்கான நுழைவுப் பரீட்சைக்கான வினாத்தாள், முன்கூட்டியே வெளியானதாக தகவல் கிடைத்துள்ளது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (15) கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (14) இடம்பெற்ற இந்தப் பரீட்சையின் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிமூல வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நீதியமைச்சர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்