தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இம்மாதம் 13ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

🕔 September 3, 2021

நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையில் அறிவிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், பின்னர் இம்மாதம் 06ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, இம்மாதம் 13ஆம் திகதி வரையிலும் இந்தச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்